அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக பரவிய வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் அவருக்கும் கட்சியின் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான தவெகவில் இணையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஏன் நான் அதிமுகவில் தொடரக்கூடாதா?” என்று மிகக் காட்டமாக பதில் அளித்தார். இதன் மூலம், தான் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்கப் போவதையும், தவெகவில் இணையப் போவதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான வதந்திகள் என்பதையும் அவர் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…
திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது,…
தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…