“எம்.எல்.ஏ பதவி ராஜினாமா? தவெக-வில் ஐக்கியம்?”…. ஒரே போடாய் போட்ட எஸ்.பி. வேலுமணி…. இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த ஷாக்…!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக பரவிய வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் அவருக்கும் கட்சியின் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான தவெகவில் இணையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஏன் நான் அதிமுகவில் தொடரக்கூடாதா?” என்று மிகக் காட்டமாக பதில் அளித்தார். இதன் மூலம், தான் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்கப் போவதையும், தவெகவில் இணையப் போவதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான வதந்திகள் என்பதையும் அவர் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.