ஈரோடு மாவட்டம், ஆட்டையாம்பாளையம் அருகே பவானி வாய்க்கால் மதகு பகுதியில், வெள்ளை நிற சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மூட்டையை திறந்து பார்த்தனர்.
அதில், வடமாநில வாலிபரின் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. இறந்த நபரின், பின் மண்டையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் விசாரணையில், அந்த நபர் அடித்து கொல்லப்பட்டு, வாய்க்காலில் வீசப்பட்டது தெரியவந்தது. இறந்த நபர் யார்? என்பதும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து, சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகமது பைசல் (22) எனத் தெரிந்தது. இவரும், இவருடன் முகமது நூர் (26), 18 வயதுடைய சிறுவன் என மூன்று பேரும் சில மாதங்களுக்கு முன்பு, நொச்சிப்பாளையம் புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி, துணியை அரைத்து நூலாக்கும் வேலையை செய்துவந்தனர். முகமது பைசலுக்கு, முகமது நூர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில், முகமது நூர் அவரை கண்டித்துள்ளார்.
கடந்த 12ஆம் தேதி, மூவரும் மது அருந்திவிட்டு, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பேசுகையில், முகமது பைசலுக்கும், முகமது நூறுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது நூர் மற்றும் சிறுவன் சேர்ந்து முகமது பைசிலை கட்டை கொண்டு, தலையில் தாக்கி கொலை செய்து, சாக்கு பையில் கட்டி வாய்க்காலில் வீசினர். மேலும் இந்த கொலையில், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…