“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

Spread the love

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து உரையாற்றிய அவர், “இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான சட்டமன்றத் தேர்தல் போட்டி; இதில் பாமக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் ஜி.கே.மணி குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுத்த அன்புமணி, “ஜி.கே.மணி அய்யாவின் (ராமதாஸ்) வலது கரமல்ல; அவர் ஸ்டாலினுடைய வலது கரம், உதயநிதி ஸ்டாலினின் வலது கரம். துரோகிகள் அவர்களைப் பற்றிப் பேசக் கூடாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், ஸ்டாலின் அந்தந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேடம் போடுவதாக விமர்சித்த அவர், தர்மபுரிக்கு வந்தால் மட்டும் வன்னியர்களைப் பற்றிப் பேசுவது திமுகவின் ரத்தத்தில் ஊறிய அரசியல் தந்திரம் என்று சாடினார்.

தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய அன்புமணி, கடந்த 79 ஆண்டுகளில் தர்மபுரி தொகுதியில் ஒரு பெண் கூட சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை என்ற குறையைச் சுட்டிக்காட்டினார். சௌமியா அன்புமணி சட்டமன்றத்திற்குச் சென்றால் பெண்களின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுப்பார் என்று உறுதி அளித்த அவர், மாவட்டத்தின் சிப்காட் திட்டத்தில் ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை என்றும், அங்கு வெறும் கற்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன என்றும் ஒரு கல்லை எடுத்துக்காட்டி விமர்சனம் செய்தார்.

திமுக அரசு மக்களைப் படிக்க வைக்காமல் குடிக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய அன்புமணி, கடந்த ஓராண்டில் மட்டும் தர்மபுரி மக்கள் 3000 கோடி ரூபாய்க்கு மது அருந்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டாரார். திமுகவை ஒரு கொடுங்கோல் ஆட்சி என்று வர்ணித்த அவர், இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், ஐந்து தொகுதிகளிலும் அவர்களுக்குப் பூஜ்ஜியம் தான் கிடைக்க வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Nanthini

Recent Posts

ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…

3 minutes ago

“இந்த பாவத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க” 12 ஆண்டுகால சித்திரவதை.. மகளைத் தாக்கிய கணவனை.. தாய் செய்த கொடூரம்..!!

நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…

14 minutes ago

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

24 minutes ago

குழந்தை பிறந்த 10 நாளில்.. மருத்துவரின் ஆலோசனையும் மீறி வந்த என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. எம்எல்ஏ பல்லவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…

29 minutes ago

மேயர் பிரியா செய்த சதி… குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்… உண்மையை உடைத்த TVK பெண் எம்எல்ஏ..!!

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…

36 minutes ago

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

1 மணத்தியாலம் ago