பகீர்…! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. பெற்ற மகளுடனே சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி… தெலுங்கானாவை உலுக்கிய கொலைச் சம்பவம்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அவஞ்ச கிராமத்தைச் சேர்ந்த எடைய்யா என்ற விவசாயி, தனது மனைவி அலிவேலு, மகள் பத்மா மற்றும் மருமகன் அஞ்சநேயுலு ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். எடைய்யாவுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை மருமகன் பெயருக்கு மாற்றித் தருமாறு அவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், தனது மனைவி அலிவேலுவுக்கும் மருமகன் அஞ்சநேயுலுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக எடைய்யா சந்தேகப்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

எடைய்யா உயிரோடு இருக்கும் வரை நிலம் கிடைக்காது என்று எண்ணிய மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகிய மூவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். அதன்படி, வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது மருமகனின் உறவினர் ஒருவர் எடைய்யாவின் கழுத்தைப் பிடித்து சுவற்றில் தள்ளியுள்ளார். அவர் கீழே விழுந்ததும், தப்பி ஓட முடியாமல் மகள் பத்மா அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, மனைவி அலிவேலு இரும்பு ராடால் எடைய்யாவின் நெஞ்சு மற்றும் பிறப்புறுப்பில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலைக்குத் திட்டம் தீட்டியபடியே, எடைய்யா உடல்நலக் குறைவால் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி அவரது மனைவி நாடகமாடியுள்ளார். உறவினர்கள் இறுதிச் சடங்கிற்காக உடலைக் குளிப்பாட்ட முயன்றபோது, அவரது மார்பிலும் உடலிலும் இருந்த ஆழமான காயங்களைக் கண்டு சந்தேகமடைந்து அலிவேலுவை விசாரித்துள்ளனர். உறவினர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பயந்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், நிலத் தகராறு மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Swetha

Recent Posts

“தயவுசெய்து உள்ளே விடுங்க…” விம்பிள்டன் மேடையில் அழுத உலக நம்பர் 1 வீராங்கனை… டென்னிஸ் அரங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மனதை உலுக்கும் வைரல் வீடியோ…!

விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…

33 minutes ago

ப்ளீஸ் என்ன விட்ருங்க… “திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி… செருப்பு மாலை அணிய வைத்து” உறவினர்கள் செய்த உச்சகட்ட கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

45 minutes ago

“பார்த்திபனுக்கு வந்த அந்த ஒரு கேவலமான மெசேஜ்”… கடுப்பான ராதிகா… பாக்கியராஜ் இறுதி சடங்கில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த தனஞ்செயன்…!

சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…

50 minutes ago

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

1 மணத்தியாலம் ago