“நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. கணவன் போட்ட பக்கா ஸ்கெட்ச்… மார்த்தாண்டத்தில் நடந்த பகீர் சம்பவம்”…!!!

Spread the love

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வந்தார். இவரது 32 வயது மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பாலப்பள்ளத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு, லாரி டிரைவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்த வாலிபர் கள்ளக்காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக வேலை முடிந்து லாரி டிரைவர் வீட்டிற்கு வந்துள்ளார். தனது மனைவி மற்றொரு இளைஞருடன் இருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஆத்திரப்பட்டு மோதலில் ஈடுபடாமல் புத்திசாலித்தனமாகச் செயல்பட முடிவெடுத்தார்.

உடனடியாக அந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிய டிரைவர், “திருடன் திருடன்” எனச் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரையும் உறவினர்களையும் திரட்டினார். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் அளித்தார். அங்கு திரண்டு வந்த உறவினர்கள் அந்த வாலிபரை சரமாரியாகத் தாக்கினர். விரைந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தான் திருடன் அல்ல என்றும் அந்தப் பெண்ணுடன் தனக்கு இருந்த பழக்கம் காரணமாகவே அங்கு வந்ததாகவும் வாலிபர் ஒப்புக்கொண்டார். போலீஸ் நிலையத்தில் வைத்து நடந்த பேச்சுவார்த்தையின் போது, தடம் மாறிச் சென்ற மனைவியுடன் இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை என லாரி டிரைவர் உறுதியாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பிய போலீசார், இந்த விசித்திரமான சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

2 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

7 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

8 minutes ago

“அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவோம்” காதலனுடன் தனிமையில் இருந்ததை தோழியிடம் சொன்ன கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…

12 minutes ago

“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…

15 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

53 minutes ago