“நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. கணவன் போட்ட பக்கா ஸ்கெட்ச்… மார்த்தாண்டத்தில் நடந்த பகீர் சம்பவம்”…!!!

By Muthu Mani on சித்திரை 28, 2026

Spread the love

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வந்தார். இவரது 32 வயது மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பாலப்பள்ளத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு, லாரி டிரைவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்த வாலிபர் கள்ளக்காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக வேலை முடிந்து லாரி டிரைவர் வீட்டிற்கு வந்துள்ளார். தனது மனைவி மற்றொரு இளைஞருடன் இருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஆத்திரப்பட்டு மோதலில் ஈடுபடாமல் புத்திசாலித்தனமாகச் செயல்பட முடிவெடுத்தார்.

   

உடனடியாக அந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிய டிரைவர், “திருடன் திருடன்” எனச் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரையும் உறவினர்களையும் திரட்டினார். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் அளித்தார். அங்கு திரண்டு வந்த உறவினர்கள் அந்த வாலிபரை சரமாரியாகத் தாக்கினர். விரைந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

   

விசாரணையில், தான் திருடன் அல்ல என்றும் அந்தப் பெண்ணுடன் தனக்கு இருந்த பழக்கம் காரணமாகவே அங்கு வந்ததாகவும் வாலிபர் ஒப்புக்கொண்டார். போலீஸ் நிலையத்தில் வைத்து நடந்த பேச்சுவார்த்தையின் போது, தடம் மாறிச் சென்ற மனைவியுடன் இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை என லாரி டிரைவர் உறுதியாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பிய போலீசார், இந்த விசித்திரமான சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.