கணவனுடன் தாலி.. காதலனுடன் முதலிரவு..! திருமணமான சில மணி நேரத்திலேயே காத்திருந்த டுவிஸ்ட்.. கதறி அழுத மாப்பிள்ளை…!!

By Soundarya on வைகாசி 10, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மாவில் வினோதமும் கொடூரமும் கலந்த ஒரு திருமணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்மணி என்ற இளைஞருக்கும் பிங்கி குமாரி என்ற பெண்ணிற்கும் ஊர் அறியத் திருமணம் நடைபெற்றது. அனைத்துச் சடங்குகளும் முறைப்படி நடந்து முடிந்த நிலையில், முதலிரவு அன்று மணமகன் தனது புதுமனைவியுடன் அறையில் நுழையக் காத்திருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக மணப்பெண் பிங்கி குமாரி, தனது கள்ளக்காதலனுடன் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப் பெண் இதற்கு முன்பே வேறொரு வாலிபருடன் ஓடிப் போய், 6 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. பெண்ணின் கடந்த காலத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், பெரும் வரதட்சணை கிடைக்கும் என்ற பேராசையில் மணமகனின் வீட்டார் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். வரதட்சணை ஆசை ஒரு குடும்பத்தின் மானத்தை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது.

   

தனது வாழ்நாள் முழுவதும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து, திருமணத்திற்காகக் காத்திருந்த மணமகன் ராஜ்மணி, தற்போது நிலைகுலைந்து போயுள்ளார். “வாழ்க்கையில் ஒருமுறை கூடத் தவறு செய்யாமல் இருந்த எனக்கு இப்படி ஒரு நிலையா?” என்று அவர் கதறி அழுவது பார்ப்போரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் பெண்ணின் துரோகமும், மறுபுறம் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணை வெறியும் சேர்ந்து ஒரு இளைஞனின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.