கர்நாடக மாநிலம் பெங்களூரில் சுட்ட குண்டே பால் யா பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) தன் மனைவி ஸ்ருதியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் சம்பவத்தன்று பாஸ்கர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ருதி பூரிக்கட்டையால் பாஸ்கரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் போலீசில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரிழந்து விட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் கணவனை அடித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
