மச்சானுக்கு திருமணம்.. மனைவி, மாமியாரை நிர்வாணமாக நிற்க வைத்து மாந்திரீக பூஜை.. கணவர் செய்த கொடூர செயல்..!

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்திலும் மூடநம்பிக்கைகளை பலரும் பின்பற்றி வருகிறார்கள். அப்படி மராட்டியம் மாநிலம் நவி மும்பை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் மாந்திரீகம் உள்ளிட்ட விவகாரங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர் ஆக இருந்துள்ளார். இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணமாகாமல் இருந்த நிலையில் திருமணத்தடை நீங்குவதற்கு சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

அதன்படி தனது மனைவியையும் மாமியாரையும் நிர்வாணமாக பூஜை செய்ய அந்த நபர் வற்புறுத்தியுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு இருவரும் அவர் சொன்னதை எல்லாம் செய்த நிலையில் ஆடை இன்றி அவர்கள் பூஜை செய்யும் புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை மனைவியின் குடும்பத்தினர் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனைவி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.