தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வழக்கம் போல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தனது வேட்பாளர் பட்டியலைச் சமூகப் பிரதிநிதித்துவ அடிப்படையில் வெளியிட்டுள்ளது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உறுதிப்படுத்தியுள்ள இந்த விபரங்களின்படி, தமிழகத்தின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பரவலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, வன்னியர் சமூகத்திற்கு 34 இடங்களும், பறையர் சமூகத்திற்கு 27 இடங்களும் இதில் 4 பொதுத்தொகுதிகள், கவுண்டர் சமூகத்திற்கு 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு 15 இடங்களும், கள்ளர் மற்றும் நாடார் சமூகங்களுக்கு தலா 11 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறவர் சமூகத்திற்கு 10, அகமுடையார் 9, பிள்ளைமார், கோணார், முதலியார் மற்றும் முத்தரையர் ஆகிய சமூகங்களுக்குத் தலா 8 இடங்களும், உடையார் சமூகத்திற்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிராமண சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர் சமூகத்திற்கு 5 இடங்களும், அருந்ததியர் மற்றும் நாயக்கர் சமூகங்களுக்குத் தலா 3 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக நாம் தமிழர் கட்சி முன்னிறுத்துகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…