திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரனைப் பார்த்து அவர் பேசுகையில், “தெற்கத்திக்காரன் பயப்படக்கூடாது. வரும்போது அரிவாள் எடுத்துட்டு வருவன்னு பார்த்தேன். வெறும் கையோடு வந்திருக்க. உன்ன நாலு பேரு வெட்டிடுவாங்க போல” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், தெற்கத்திக்காரன் வரும்போது அரிவாளைக் கொண்டுவந்து 4 பேரை வெட்டிவிட்டுப் போவார்கள் என்று கூறியதாக இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவின் இந்த “அரிவாளை எடுத்து வெட்டணும்” என்ற ரீதியிலான சர்ச்சை பேச்சு தற்பொழுது பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
