வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா…? இந்த விஷயங்களை மறக்காம கடைபிடிங்க…

Spread the love

இன்று பல பேருக்கு இருக்கும் பிரச்சினை பணம்தான். பணம் இருந்தால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நினைப்பவர்கள் இருக்கிறதான் செய்கிறார்கள், அதற்கு தகுந்தார் போல் இன்றைய விலைவாசி உயர்வும் நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. அப்போது வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் நிலைமை பார்த்தால் வேதனையாக தான் இருக்கும். என்னதான் ஒரு சில வீட்டில் ஓடி ஓடி உழைத்தாலும் பணம் வருவது போல் இருந்தாலும் கையில் தாங்காமல் சென்று கொண்டே இருக்கும். ஒரு சில பேருக்கு பணம் வருவதற்கான வாய்ப்பு தடைப்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம் சாஸ்திரங்கள் கூறுவது என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

நம் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கவும் வந்த பணம் கையில் தங்குவதற்கு ஒரு சில எளிய பரிகார முறைகளை நாம் கடைப்பிடித்தால் அது நல்ல பலன்களை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் பணம் இன்றைய காலகட்டத்தில் பல பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு கருவியாக இருந்து வருகிறது. பணம் ஒருவர் கையில் சரளமாக புழங்க வேண்டும் என்றால் வீட்டின் வடக்கு சுவரில் ஜன்னல் சேர்ந்து இருக்க வேண்டும். அது எப்போதும் திறந்து இருக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவை தெற்கு திசையில் வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பணம் அதிகரிக்கும்.

ஒரு சிலர் பணத்தை பூஜை அறையில் வைத்து பயன்படுத்துவார்கள். அப்படி செய்யக்கூடாது ஏனென்றால் பணம் பலர் கைக்கு சென்று மாறி வருவதால் பூஜையறை தெய்வத்தன்மையுடன் இருப்பதால் அங்கு பணத்தை வைக்க வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் பணம் கிடைத்தால் அதை பூஜை அறையில் ஒரு ஐந்து நிமிடங்கள் 10 நிமிடங்கள் பூஜையின் போது வைத்து சாமி கும்பிட்டு விட்டு எடுத்து விடுங்கள். அதற்கு அடுத்ததாக பணத்தை பீரோவில் மரப்பட்டியில் வைத்து பயன்படுத்துவது பண வரவை அதிகரிக்கும்.

எதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதுதான் தேக்கு மரம். அதனால் தான் அதற்கு அந்த பெயர் ஏற்பட்டது. உங்களால் முடிந்தால் தேக்கு மரத்தில் சிறிய மரப்பெட்டியை செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த மரப்பெட்டியில் பணத்தை சிவப்பு நிற துணியில் சுற்றி வைக்கும் போது அது பணவரவை அதிகப்படுத்தும். மேலும் பணம் வைத்திருக்கும் இடம் மணமாக இருக்க வேண்டும். அதனால் பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை பணம் வைக்கும் பெட்டியில் போட்டு வையுங்கள். மேலும் வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. அதனால் நாட்டு மருந்து கடைகளில் சிறிய துண்டு வசம்பை பணப்பெட்டியிலும் உங்கள் பர்ஸிலும் வைத்தால் அது பணத்தை ஈர்க்கும்.

சிலருக்கு வாஸ்து தோஷத்தினால் பணம் சேராமல் இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு வழியில் சென்று கொண்டே இருக்கும். அப்படி நினைப்பவர்கள் வீட்டில் மயிலிறகை வைத்தால் செல்வம் பெருகும். பணம் நகை வைக்கும் பீரோவில் ஒரு மயிலிறகை வையுங்கள் மற்றும் செல்வம் அதிகரிக்கவும் வீட்டில் தங்கம் சேரவும் பூஜை அறையில் மகாலட்சுமியின் அருள் நிறைந்த பொருட்களான வலம்புரிச் சங்கு மற்றும் ஒரு கண்ணாடி வைத்து அதன் முன் ஒரு கிண்ணத்தில் காசு வைத்து அதை பூஜிக்கும்போது உங்களுக்கு பணம் வரவு ஏற்பட்டு வீட்டில் செல்வம் கொழிக்கும்.

admin

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

1 மணத்தியாலம் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

1 மணத்தியாலம் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

1 மணத்தியாலம் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

1 மணத்தியாலம் ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

2 மணத்தியாலங்கள் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

2 மணத்தியாலங்கள் ago