தமிழ் சினிமாவிற்கு புதுவிதமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்ற இயக்குனர் தான் பாலா. இவருடைய இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் தான் நந்தா. அதுவரை ஒரு சாதாரண நடிகராக இருந்த சூர்யாவுக்குள் புது ரத்தம் பாய்ச்சியது இந்த திரைப்படம் தான். இந்தப் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் டாப் லெவலுக்கு சென்று விட்டது. ஆனால் நந்தா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த இந்த படத்தில் அஜித் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவை தாண்டி கார் ரேசிலும் பங்கேற்று வரும் அஜித் சினிமாவை மட்டுமே நம்பி கிடையாது. இப்படி இருக்கையில் இவர் ஏன் பாலா படத்தில் நடிக்க மறுத்தார் என்பதற்கான காரணம் பற்றி ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், நந்தா திரைப்படம் அஜித் நடிக்க வேண்டிய படம் தான். நந்தா படத்தில் கதையை முதலில் அஜித் சார்கிட்ட தான் பாலா சொன்னாரு. அப்போ நான் பாலா சார் கூட இருந்தேன். ஆனால் 1 லைன் தான் கதை சொன்னார். கேட்டதுமே அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனாலும் முழு கதையையும் கேட்க பாலா அதை சொல்லவில்லை.
அதனால் அஜித்துக்கு அடுத்த முறையும் முழு கதையையும் சொல்லவில்லை. பாலாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு முழு கதையையும் சொல்லி பழக்கம் இல்லை. கதை எழுதி வச்சிருக்கேன், அதுல கூட நிறைய மாற்றுவேன், 13வது சீன் 17வது சீனாக கூட மாறும். திடீர்னு முழுவதையும் மாற்றி விட்டு மறுபடியும் ஷூட்டிங் பண்ணுவேன் என்று பாலா கூறுவார். இதன் காரணமாக அஜித் மற்றும் பாலா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மரியாதை நிமித்தமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார்.
அந்தப் படத்தில் அஜித் விலகியதும் சூர்யா உள்ளே வந்தார். அதுதான் சூர்யா ஓட வளர்ச்சியை. ஒருவேளை பாலா மற்றும் அஜித் காம்போ இருந்திருந்தால் வேறு மாதிரி படம் வந்திருக்கும். அஜித் மேலையும் தப்பு கிடையாது. அவர் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எதிர்பார்த்தாரு. பாலாவை பொறுத்தவரை சேது மற்றும் பிதாமகன் படங்களுக்கு யாருக்குமே முழு கதையையும் சொன்னது இல்லை. ஆனாலும் ஹிட் கொடுத்தாரு. இவங்களுக்குள்ள புரிதல் தான் ரொம்ப முக்கியம். இருவருமே வேறு வேறு ரயிலில் இருக்கும்போது ஆட்டோமேட்டிக்கா அது செட்டாகாது என்பது ரத்தினவேலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…