முந்தைய காலத்தில் பணக்காரர்கள் தான் ஒரு சில பொருட்கள் வைத்திருப்பார்கள். நடுத்தரம் அல்லது ஏழை மக்களோ அந்த பொருட்களை வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக பணக்காரர் வீட்டில் தான் கார் இருக்கும். நடுத்தர மக்களின் வீட்டில் கார் இருக்காது. அதேபோல் பணக்காரர் வீட்டில் டிவி போன்ற பொருட்கள் இருக்கும். அதை ஏழை குடும்பத்து குழந்தைகள் ஆச்சரியத்துடன் சென்று பார்ப்பது உண்டு. இன்றைய காலகட்டத்தில் அப்படி எதுவுமே இல்லை.

EMI என்ற ஒன்று வந்தது தான் கடன் வாங்கியாவது எதையாவது வீட்டில் தேவையில்லாத பொருட்களை எல்லாரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அதே போல் கார் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிகபட்சமாக எல்லார் வீட்டிலும் கார் இருக்கிறது. அதேபோல் பணக்காரர்கள் மட்டும்தான் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி தற்போது எல்லோரும் ஓரளவுக்கு விமானத்தில் செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் எல்லோராலும் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனை என்றால் விமான நிலையத்தில் எந்த பொருளையும் வாங்கவே முடியாது.
விமான நிலையத்தில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வெளியில் இருக்கும் விலையை விட உள்ளே 10 மடங்கு அதுக்கும் அதிகமாக தான் இருக்கும். இது சாப்பாட்டு பொருள்களுக்கும் அடங்கும். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியானது. அதில் விமான நிலையத்தில் விற்கப்படும் பஜ்ஜி ரூபாய் 225 ஆகவும் போண்டா ரூ 195 ஆகவும் விலை போடப்பட்டு இருந்தது. இதை பார்த்த அனைவரும் வாயை பிளந்து விட்டார்கள்.
எதற்காக விமான நிலையத்தில் இவ்வளவு பகல் கொள்ளை அடிக்கிறார்கள். வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் பஜ்ஜி 10 மடங்கு வைத்தால் கூட 100 ரூபாய் தான் ஆனது. இவர்கள் எப்படி இவ்வளவு அநியாய விலைக்கு விற்கிறார்கள் என இந்த கேள்வி பலருக்கும் எழலாம். விமான நிலையத்தில் பொருட்களின் விலை அதிகளவு இருப்தற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

விமான நிலையத்தில் எல்லா பொருட்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் அங்கிருக்கும் கடைகளில் வாடகை அதிக அளவில் இருக்கும். அதே போல் கடைகளுக்கு லைசன்ஸ் பெற்றால் மட்டுமே நடத்த முடியும். நம்முடைய சௌகரியத்துக்கு உணவு எடுத்து விற்பனை செய்ய முடியாது. குறிப்பிட்ட அளவிலான உணவு மட்டும்தான் விற்பனை செய்ய முடியும் அதுவும் செக்யூரிட்டி ஸ்கிரீனிங் லாஜிஸ்டிக் என ஆபரேஷன் காஸ்ட் அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும் அங்கே வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியமும் விமான நிலையங்களில் அதிகம் என்று கூறப்படுகிறது. இது போன்ற காரணங்கள்தான் விமான நிலையத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிக அளவில் இருக்கிறது. உணவுகளும் கூட யாராலும் சர்வ சாதாரணமாக வாங்க முடியாத நிலையில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
