#image_title
ஒற்றை தலைவலி என்பது நரம்பியல் சம்பந்தமான தொடர் கடுமையான தலைவலியாகவும். குறிப்பாக தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுகடுப்பான வலிகள் ஏற்படும். ஒரு சிலருக்கு இந்த ஒற்றை தலைவலி வந்தவுடன் வாந்தி குமட்டல் போன்றவை இருக்கும். இதை ஆங்கிலத்தில் Migrane என்று சொல்கிறார்கள். இந்த ஒற்றை தலைவலி எதனால் வருகிறது? இதற்கான நிவாரணங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இந்த ஒற்றை தலைவலி பலர் ஹார்மோன் பிரச்சினைகளால் கூட வரும் என்கிறார்கள். இது தவிர அதிகப்படியான ஆல்கஹால் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக கூட ஒற்றைத் தலைவலி வரலாம் என்று கூறுகிறார்கள். சரியான தூக்கமின்மை அதிகமான மன அழுத்தம் உணவை தவிர்ப்பது போன்றவை ஒற்றை தலைவலி ஏற்படுத்தும். சில தடை செய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் ரத்த அழுத்த மருந்துகள் போன்றவை ஒற்றை தலைவலியை தூண்டும் என கூறப்படுகிறது.
இந்த ஒற்றை தலைவலி வந்துவிட்டால் அதற்கான வீட்டு நிவாரண முறைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால் முதலில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான நீரை குடிக்க வேண்டும்.
பாதப்படுத்தப்பட்ட உணவுகள் செயற்கை இனிப்புகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். லாவண்டர் மட்டும் பெப்பர்மென்ட் போன்ற எசன்ஷியல் ஆயில்களை சுவாசிக்கும் போது அந்த வாசனை ஒற்றைத் தலைவலியில் இருந்து சற்று நிவாரணம் அளிக்கும். அடுத்ததாக இஞ்சி கொத்தமல்லி விதை ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்த டீயை அருந்தலாம். இது ஒற்றைத் தலைவலியை குறைப்பதற்கு உதவும்.
ஒற்றை தலைவலி ஏற்படுபவர்கள் முதல்ல சீரான தூக்கத்தை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவது மிகவும் முக்கியம். மன அழுத்தத்தை குறைத்தாலும் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க முடியும். சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் முறையான ஒரு வாழ்க்கை முறையை நாம் கடைபிடிக்கும்போது எந்த நோயிலிருந்தும் நம்மால் நிவாரணம் பெற முடியும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…