கடவுள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா…? எந்த கடவுள் வந்தால் என்ன பலன்…?

Spread the love

தூங்கும்போது நம் அனைவருக்கும் கனவுகள் வருவது வழக்கம். ஒரு சில கனவுகள் நினைவில் இருக்கும். ஒரு சில கனவுகள் மறந்துவிடும். அது நல்லவையாக இருக்கலாம் அல்லது கெட்டவைகளாக இருக்கலாம். ஆனால் ஒரு சில கனவுகள் வருவதினால் அதற்கு ஏற்ற பலன்கள் இருக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அப்படி கடவுள்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? எந்த கடவுள் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்பதை பற்றி இனி காண்போம்.

பெரும்பாலானோருக்கு கடவுள் கனவில் வருவதில்லை. ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும் ஏனென்றால் அவர்கள் எப்போதும் கடவுளை நினைத்து மந்திரங்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கடவுளை பற்றி அடிக்கடி கனவில் காண்பது நீங்கள் மகிழ்ச்சியாகவும் உங்கள் வாழ்க்கை திருப்தியாகவும் இருப்பதை குறிக்கிறது. கடவுள்கள் கனவில் வந்தால் நீங்கள் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் கோயில்கள் கனவில் வந்தாலும் நல்லது நடக்கும் என்று கூறுவார்கள். நீங்கள் தெய்வ சக்தியோடு இணைந்து நெருங்கி இருக்கிறீர்கள் என்பதற்கு சான்றாக தான் கடவுள்கள் கனவில் வருவதற்கு அர்த்தமாக கூறப்படுகிறது.

விநாயகப் பெருமான் உங்கள் கனவில் வந்தால் உங்களை சுற்றி உள்ள பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும் என்பதை குறிக்கிறது. முருகப்பெருமான் உங்கள் கனவில் வந்தால் நடப்பவைகள் அனைத்தும் நன்மையில் முடியும் உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீக்கும். பெண் தெய்வங்கள் கனவில் வந்தால் உங்கள் எதிரிகள் பலமிழந்து போவார்கள் மற்றும் வெற்றி உங்களை தேடி வரும்.

காவல் தெய்வங்களை கனவில் கண்டால் சகல ஐஸ்வர்யங்கள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். காவல் தெய்வங்கள் என்றால் மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலைமுத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து ஆகிய தெய்வங்களை காவல் தெய்வங்கள் என்று அழைப்பர்.

பெருமான் அல்லது சிவலிங்கம் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வர போகிறது என்று அர்த்தம். நல்ல காலம் வரப்போகிறது என்பதையும் உணர்த்துகிறது. லட்சுமி தேவியை உங்கள் கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும். அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியை கனவில் கண்டால் அபரிதமான செல்வத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

துர்கா தேவியை சிப்புநிற ஆடையுடன் கனவில் நீங்கள் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்வு நடக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. அதே போல் துர்கா தேவியோடு கர்ஜனை செய்யும் சிங்கத்தை கண்டால் ஏதோ பிரச்சினை வருவதை குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். பொதுவாக கடவுள்கள் கனவில் வந்தால் அது உங்கள் வாழ்க்கையில் மேம்பாட்டையும் நற்பலன்களுமே தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

admin

Recent Posts

கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுத்ததற்கு காரணமே வெங்கடேசன் தான்.. விஜய்யுடன் இருக்கும் அந்த நட்பு.. வெளியான தகவல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு, சிபிஎம் (CPM) மற்றும் சிபிஐ (CPI)…

17 minutes ago

இன்றைய தங்கம் விலை இதுதான்..! ஒரு சவரன் ரூ.1,13,200.. நகைப்பிரியர்களுக்கு காத்திருந்த டிவிஸ்ட்..!!

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று…

39 minutes ago

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” பாதுகாப்பு வலையைச் சோதிக்க உயிரைப் பணையம் வைத்த நபர்..! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 'குழந்தைகள் பாதுகாப்பு…

45 minutes ago

“பதவியிலேயே அமரல அதற்குள்ள பித்தலாட்டமா..?” விஜய்யை சீண்டும் திமுக எம்.பி… தமிழக அரசியலில் அனல் பறக்கும் மோதல்..!!

தமிழக அரசியலில் 'மாற்றம்' கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக…

49 minutes ago

“நாங்க ஒன்னும் வெண்ணெய் கிடையாது” ஒரே ஒரு எம்.எல்.ஏ… அவ்வளவுதானா தம்பி? இதையெல்லாம் நாங்க பார்த்தாச்சு… டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.…

53 minutes ago

“மன உளைச்சலா இருக்கு” தூக்கமே வர மாட்டேங்குது… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத கர்ப்பிணி பெண்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

1 மணத்தியாலம் ago