விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெற்றிகரமாக இறுதி போட்டிக்குள் நுழைந்த அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி போன்ற 5 போட்டியாளர்களில் ஒருவர் தான் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளனர்.
பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக தற்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரியான அர்ச்சனா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் எப்பொழுதும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தனர்.
ஆனால் மாயாவை பின்னுக்கு தள்ளி மணிச்சந்திரா தற்பொழுது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதனால் ஃபைனல் மேடையில் அர்ச்சனா மற்றும் மணி இரண்டு பேர் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அர்ச்சனா டைட்டில் வென்று விட்டதாகவும், அவருக்கு 50 லட்சம் பரிசு தொகையும், ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள வீடும் கொடுக்கப்பட்டதாகவும், அவரது சம்பளம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் இந்நிலையில் தற்பொழுது ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது . அதன்படி அர்ச்சனா இன்னும் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் ஷூட்டிங் இன்று மதியம் தான் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் தான் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இப்பதிவானது இணையத்தில் பதிலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…
Similar to the previous season, only a partial shoot was completed today. The remaining shoot, along with the announcement of the title winner and runner-up, will take place tomorrow afternoon.#BiggBossTamil7 #BiggBoss7Tamil
— BiggBoss Booster (@bb_booster) January 13, 2024