உதயநிதி கைதானபோது நடந்தது என்ன?… கடைசி நேரத்தில் கதறவிட்ட அந்த 4 பேர்…. வெளியான பரபரப்பு தகவல்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

அவதூறு வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தருணத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் யாரும் உடன் நிற்காமல் விலகிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் களம் கண்ட பிறகும் கார்த்தி, ரத்திஷ், சுஜய், வெங்கட் உள்ளிட்ட பழைய நட்பு வட்டாரத்துடனேயே அதிக நேரத்தைச் செலவிட்டு வந்த உதயநிதிக்கு, கைது நடவடிக்கையின் போது அவர்கள் அனைவரும் அஞ்சி ஓடியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், உதயநிதியின் நடவடிக்கைகளால் கட்சிப் பணிகளில் ஓரங்கட்டப்பட்டு மனக்கசப்பில் இருந்த திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர், இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து விரைந்து வந்து அவருக்குத் தேவையான சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியிலான உதவிகளைச் செய்து கை கொடுத்துள்ளது அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.