பத்மஸ்ரீ முதல் பாரத ரத்னா வரை…! விருது பெற்றவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on தை 26, 2026

Spread the love

இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளாகக் கருதப்படும் பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள், கலை, அறிவியல், பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்களுக்குக் குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதில் பாரத ரத்னா விருது பெறுவோருக்குப் பணமாக எவ்விதத் தொகையும் வழங்கப்படுவதில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு மற்றும் ஏர் இந்தியா விமானங்களிலும், இந்திய இரயில்வேயிலும் முதல் வகுப்பில் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி போன்ற மெச்சத்தக்கச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், இவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’ வழங்கப்படுவதுடன், அரசு விழாக்களில் மத்திய அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தும், மாநில விருந்தினர் மாளிகையில் இலவச தங்குமிட வசதியும் உறுதி செய்யப்படுகின்றன. இதற்கு அடுத்த நிலையில் உள்ள பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகளைப் பெறுபவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர, ரொக்கப் பரிசோ அல்லது பாரத ரத்னாவுக்கு இணையான இலவச பயணச் சலுகைகளோ வழங்கப்படுவதில்லை. இவை முதன்மையாக ஒரு கௌரவ அங்கீகாரமாகவே பார்க்கப்படுகின்றன.

   

இவ்விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ விருதுப் பெயரை ஒரு பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது என்பது சட்டப்பூர்வமான விதிமுறையாகும். அரசு விழாக்களில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளும் முன்னுரிமை இவர்களுக்குக் கிடைத்தாலும், நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களைப் பெருமைப்படுத்தும் அடையாளமாகவே பத்ம விருதுகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன.