ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபூடி கிராமத்தின் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஒரு தனித்துவமான திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே உண்டியலை உடைத்து தான் பணம் திருடுவார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வரும் வீடியோவில் திருடன் தன்னுடைய செயல் திறன் மூலமாக கண்களை மாயச் செய்யும் காட்சியை வெளியாகி உள்ளது. திருடன் முன்கூட்டியே கொண்டுவரப்பட்ட ஒரு மெல்லிய வயரை பயன்படுத்தி அதில் பபுல்கம் ஒட்டி பிறகு உண்டியலுக்குள் நுழைத்து, உள்ளே உள்ள பணத்தை மெதுவாக மேலே இழுத்து எடுத்துள்ளார். இதனால் பணம் ஒட்டிக்கொண்டு அப்படியே வருகிறது.
இந்த செயலால் பணம் அடிக்கடி திருடு போய் இருப்பதை கவனித்த கோவில் நிர்வாகம் சந்தேகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்தனர். இதன் மூலம் திருட்டு முறையை முழுமையாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நெட்டிசன்கள் இதனை ஒரு கலைஞரை போன்ற செயல்பாடு என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த மாதிரியான திருட்டு சம்பவங்கள் தடுப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…