அச்சச்சோ… அக்கா திரிஷா விவகாரத்தில்… கொதித்த நற்பணி மன்றம்… உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக… மதுரையில் போஸ்டர் போர்… அரசியலில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவேரி நீர் பிரச்சனை குறித்துப் பேசுகையில் தொண்டர்கள் சிலர் நடிகை திரிஷாவின் பெயரை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த விளக்கம் இரட்டை அர்த்தத்தில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. பொதுவெளியில் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் பேரில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு 8 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே ஆங்காங்கே மோதல்களும், கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுகவினரின் போராட்டங்களும் வெடித்தன. இந்தச் சூழலில், மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பெண்கள் நம் நாட்டின் கண்கள்; நகைச்சுவை என்ற பெயரில் எங்கள் அன்பு அக்கா திரிஷா பற்றி இரட்டை அர்த்தத்தில் தவறாகப் பேசினால் ஏற்க முடியாது, மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என எச்சரித்து மாநகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

   

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை மாவட்ட திமுக சார்பிலும் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலினின் கைதைக் கண்டித்தும், “அநீதி வீழும்; அறம் வெல்லும்” என்ற வாசகங்களுடனும் திமுகவினர் போஸ்டர்களைப் பதித்துள்ளனர். இதனால் மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினருக்கும் திமுகவினருக்கும் இடையே தீவிரமான போஸ்டர் யுத்தம் உருவாகி, அப்பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.