CINEMA
கணவரை பிரிந்து வாழும், vj ப்ரியங்காவின் திருமண புகைப்படங்கள்..
இன்றைய காலத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். தாய் சுனிதா. இவருக்கு ரோஹித் தேஷ்பாண்டே என்ற ஒரு தம்பியும் உள்ளார். தொகுப்பாளனி பிரியங்கா எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில்என்ட்ரி கொடுத்தார்.அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிட்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜூ வீட்ல பார்ட்டி, பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக், தி வாள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளனியாக பணியாற்றியுள்ளார்.
பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன. தற்போது இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .