தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானக இருந்தவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ. 1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
