முடி ரொம்ப கொட்டுதா…? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இப்படி பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!

By Devi Ramu on கார்த்திகை 29, 2025

Spread the love

குளிர்காலத்தில் கொத்துக் கொத்தாக முடி உதிர்வது ஒரு பொதுவான பிரச்சனையாகும். பருவகால மாற்றங்களால் ஏற்படும் வறண்ட காற்றுதான் இதற்கு முக்கியக் காரணம். எனவே, இந்தப் பருவத்தில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தச் சில மாற்றங்களைச் செய்வது அவசியம்.

முதலில், வருடம் முழுவதும் ஒரே ஷாம்புவைப் பயன்படுத்தாமல், குளிர்காலத்தில் கூந்தலின் வறட்சிக்கு ஏற்ற உட்பொருட்களைக் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும். மற்ற பருவங்களைவிடக் குளிர்காலத்தில் தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது மிகவும் முக்கியம்; இது உச்சந்தலை வறட்சி அடையாமல் தடுக்கும்.

   

மேலும், உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க, வெதுவெதுப்பான தேங்காய் அல்லது நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். செம்பருத்திப் பூ மாஸ்க். முடியை வலுவாக்கும் கறிவேப்பிலை ஹேர் பேக், மற்றும் சாதம் வடித்த கஞ்சியைத் தடவுதல் ஆகியவை முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள் ஆகும். இந்த எளிய குறிப்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் குளிர்கால முடி உதிர்வைக் கட்டுப்படுத்த முடியும்.