தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் டீத்தூள், சோப்பு போன்ற அத்தியாவசியமற்ற கூடுதல் பொருட்களை வாங்குமாறு நுகர்வோரை எக்காரணம் கொண்டும் ஊழியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட ரமணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் . ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டாம் என்று மறுக்கும் பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும், அவர்கள் கேட்கும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஊழியர்கள் முறையாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார் .
அரசின் இந்த உத்தரவை மீறி, ரேஷன் கார்டுதாரர்களைக் கட்டாயப்படுத்தி கூடுதல் பொருட்களைத் திணிக்கும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், ஏழை எளிய மக்களின் தேவைகளைச் சுமையின்றி பூர்த்தி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…