1957-க்குப் பிறகு நடந்த அதிசயம்…! வடகொரியாவில் எதிர்த்து விழுந்த வாக்குகள்…! மிரண்டு போன நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on பங்குனி 18, 2026

Spread the love

வடகொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கிம் ஜாங் உன் 99.93 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளார். அந்நாட்டின் சட்டப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே களமிறங்குவதால், இந்தத் தேர்தல் ஒரு சடங்காகவே பார்க்கப்படுகிறது. எனினும், 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தத் தேர்தலில் கிம் ஜாங் உன்னிற்கு எதிராக 0.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில், அதிபரின் உத்தரவை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில், அவருக்கு எதிராகத் துணிச்சலாக வாக்களித்த அந்தச் சிறு சதவீத மக்கள் யார் என்பது குறித்து இணையதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்களா என நெட்டிசன்கள் பலரும் கவலையுடனும் கிண்டலாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.