எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை… கரும்புகையால் இருளில் மூழ்கிய இந்தியா… “இரவு 7:30 மணிக்குள்” IMD வெளியிட்ட அறிவிப்பு..!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love
கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எரிமலை 12000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்து சிதறியுள்ளது. அடிஸ் அபாபிவிலிருந்து 500 மைல்  தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும் புகைகள் வெளியேறி வருகிறது.

சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தானை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான் பகுதியில் கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. இந்த கரும்புகை சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இன்று இரவு 7:30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் என்றும் இந்திய வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.