தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய விஷாலுக்கு இந்த திரைப்படம் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் விஷால் கேரியரில் பெரிய வெற்றி படமாக அமைந்தது என்று கூறலாம். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டியநாடு, பூஜை மற்றும் மருது உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் கலக்கி துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார். அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நேற்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுத்து வழிபட்டார்.
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…
பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…