ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு முகமைகள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நேற்று அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் தீவிர மதப் பேச்சாளர்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்ற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, அத்தகைய நபர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடும் என்பதால், உளவுத்துறைத் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மற்றும் லக்னோ போன்ற பகுதிகளில் காமேனியின் மறைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தூதரகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…