1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
அதனால் வரிசையாக அவர் இயக்கிய படங்கள் தோல்வி அடையத் தொடங்கின. அப்படி அவர் இயக்கி படுதோல்வி அடைந்த படங்களில் ஒன்றுதான் பரத் மற்றும் ஜெனிலியா நடித்த சென்னை காதல் திரைப்படம். அந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அந்த படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அவர் இயக்கியதிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் என்றால் அது விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல திரைப்படம். அதில் விஜயகாந்த் இரட்டை வேடங்களிலும் பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் முதலில் விஜயகாந்தே இல்லையாம். இயக்குனர் விக்ரமன் அந்த மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்தால் நன்றாக் இருக்கும் என முடிவு செய்திருந்தாராம். ஆனால் சூரியவம்சம் ஹிட்டுக்கு ஏன் ஜனகராஜை வைத்து படம் பண்ண வேண்டுமென தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி விஜயகாந்தை நடிக்க வைக்கலாம் என சொன்னதும் வேறு வழியில்லாமல் கதையை மாற்றினாராம்.
விஜயகாந்த் உள்ளே வந்ததும் அவரது கதாபாத்திரத்தை இரட்டை வேடமாக்கி விட்டாராம். மூத்த விஜயகாந்துக்கு எமோஷனலானக் காட்சிகளும், இளைய விஜயகாந்துக்கு மீனாவுடனான காதல் மற்றும் தொழிலில் முன்னேறுவது போன்ற காட்சிகளும் செருகப்பட்டு ஒரு பேமிலி டிராமாவாக வானத்தைப் போல உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
