தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். திமுக பிரமுகர் கே என் நேருவின் நெருங்கிய உறவினரான இவர் பாரதிராஜாவின் அறிமுகத்தால் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடித்த ‘எஜமான்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின்னர் ’சீவலப்பேரி பாண்டி’ எனும் படத்தின் கதாநாயகன் ஆனார். அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து சீவலப்பேரி பாண்டி போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் அவரால் கதாநாயகனாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நிலைக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினர்.
அதில் கமல்ஹாசனோடு அவர் நடித்த விருமாண்டி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தன்னுடைய மகனின் உடல்நிலை காரணமாக அவர் இப்போது அமெரிக்காவிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் அவர் பாரதிராஜா இயக்கத்தில் தான் நடித்த முதல் படமான புது நெல்லு புது நாத்து திரைபப்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். “நடிகனாக வேண்டும் என பல தடவை பாரதிராஜாவை சந்தித்து கடைசியில் அந்த பட வாய்ப்பை வாங்கினாராம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் அங்கு அவர் தனக்கானக் காட்சிகளை எடுக்கவேயில்லையாம்.
கடைசியாக ஒருநாள் அழைத்து எனக்கு வயசான கெட்டப் போட்டு அங்குமிங்கும் நடக்கவிட்டார், வில்லத்தனமாக சிரிக்கவைத்தார். இவ்வளவு நாள் காத்திருந்து ஒரு கெழவன் வேஷம்தான் போடணுமா என நான் யோசித்தேன். படம் முடிந்து ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டான போது யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை.
சினிமாக் காரர்களே பலரும் அந்த வயசான தாத்தா யார்யா? நல்லா நடிச்சிருக்காரா என பாராட்டினார்கள். அது நான்தான் என சொன்ன போது யாருமே நம்பவில்லை. அப்போது எனக்கு 27 வயதுதான் ஆகியிருந்தது.” எனப் பகிர்ந்துள்ளார்.
