தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை முறையாகக் குறிப்பிடவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தனது மனைவி சங்கீதாவிற்கு 12.6 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறை விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வெங்கடேஷ் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 27) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை அளிப்பது தேர்தல் விதிகளின்படி கடுமையான குற்றமாகக் கருதப்படுவதால், மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விஜய்க்குத் தேர்தல் ரீதியாகப் பெரும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே எழுந்துள்ள இந்தச் சொத்து விவகாரம், தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…