தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், தவெக ஆட்சியமைக்க திமுக எந்தவித இடையூறும் செய்யாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “புதிதாக அமையவுள்ள அரசுக்கு அடுத்த 6 மாத காலத்திற்கு எந்தவிதமான தொந்தரவும் அளிக்காமல், அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்குவோம்” எனக் கூறி அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குறிப்பாக, தவெக-வை தடுக்க திமுகவும் அதிமுகவும் ரகசியக் கூட்டணி அமைக்க வியூகம் வகுத்து வருவதாகப் பரவி வந்த வதந்திகளுக்கும் இதன் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் நிலவி வந்த ஒருவிதமான பதற்றத்தைத் தணித்துள்ளதோடு, தவெக ஆட்சியமைப்பதற்கான தார்மீக வழியை எளிதாக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
