பிரேமலதா உடம்பில் புகுந்த விஜயகாந்த் ஆவி… அதனால் தான் அப்படி நடந்தது.. அண்ணாமலை போட்ட குண்டு..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்துப் பேசிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. சேலத்தில் நடந்த திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளும், போதைக் கலாச்சாரமும் நிலவுவதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி ஆவடியில் பிரச்சாரம் செய்த அண்ணாமலை, விஜயகாந்தின் ஆவி பிரேமலதாவுக்குள் புகுந்துவிட்டதால்தான் அவர் உண்மையை உரக்கப் பேசியதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தக் கூட்டணி உடைந்த தேங்காயைப் போலச் சிதறிக் கிடப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை மேடையிலேயே சுட்டிக்காட்டிய பிரேமலதாவை பாராட்டுவதாகவும், எனவே மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சு வைரலாகி வருகிறது.