தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த்.
கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர் இவர் அவ்வப்போது உடற்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவார். அப்படி பரிசோதனைக்கு சென்று இருந்த போது அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் கேப்டன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும், அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என கூறப்பட்டிருந்ததது.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்று காலை மருத்துவமனை அறிக்கை வழக்கமான அறிக்கைதான். இதைப் பற்றி பயப்பட வேண்டிய தேவை இல்லை. கேப்டன் நலமுடன் உள்ளார். மருத்துவமனை, செவிலியர் மற்றும் நானும் அவரை நலமுடன் பார்த்துக் கொள்கிறோம். அவர் வெகுவிரைவில் வீடு திரும்பி உங்களை சந்திப்பார். அவர் செய்த தர்மமும், அத்தனை பேரின் பிரார்த்தனையும் நிச்சயம் தலைவரை காப்பாற்றும். எனவே கடைக்கோடி தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டும். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். அது எப்போது என்பதை நாங்கள் தெரிவிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் தற்பொழுது பதட்டத்தில் இருந்த தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் தற்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளனர். இதோ அந்த வீடியோ…
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…