Categories: சினிமா

ரஜினிக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்ற விஜயகாந்த்.. மறுத்த இப்ராஹிம் ராவுத்தர்.. ஏன் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் சினிமாவில் இருந்து விலகினார். அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்த விஜயகாந்த் தன்னுடைய வீழ்ச்சியை சந்தித்தார்.

#image_title

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அவருக்கு மிகப்பெரிய அளவில் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் சில படங்களில் நடித்தார்.  தொடக்கத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் எளிதாகக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. அதனால் அவர் சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருக்கவேண்டிய சூழல் உருவானது.

#image_title

இந்த நிலையில் ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் ரஜினிகாந்தின் சகோதரர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. அதை மகிழ்ச்சியாக ஏற்ற விஜயகாந்த் மிகப்பெரிய தொகையை முன்பணமாகவும் வாங்கியுள்ளார். இதை தன்னுடைய நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தரிடம் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் இந்த முடிவால் கோபமான இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்தை திட்டியுள்ளார். அவரிடம் “நான் உன்னை எவ்வளவு பெரிய ஹீரோவாக்க முயற்சி செய்து போராடிக் கொண்டிருக்கிறேன். நீ இப்படி சிறிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறாயே. ஒருமுறை இதுபோல வேடத்தில் நடித்துவிட்டால் உனக்கு அப்புறம் கதாநாயகன் வேடமே வராமல் போய்விடும்” என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

#image_title

பின்னர் ஏவிஎம் நிறுவனத்திடம் சென்று வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் ராவுத்தர். ராவுத்தரின் அந்த முடிவு விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவாக அமைந்தது என்றால் மிகையாகாது. அதன் பின்னர்தான் பல ஹிட் படங்களைக் கொடுத்து  விஜயகாந்த் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

vinoth

Recent Posts

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

22 minutes ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

23 minutes ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

26 minutes ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

40 minutes ago

“நான் சாகப்போறேன் பாரேன்” காதலியிடம் பேசிக்கொண்டே விளையாட்டாக கழுத்தில் தூக்கு மாட்டிய இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…

44 minutes ago

பெரும் பரபரப்பு..! தவெக நிர்வாகி அடித்துக் கொலை… சேலத்தில் பயங்கர அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…

46 minutes ago