#image_title
தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.
ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 1991 ஆம் ஆண்டு விஜயகாந்துக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு அடுத்த ஆண்டு அவரின் மூத்த மகனான விஜய பிரபாகரன் பிறந்தார். அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு சண்முக பாண்டியன் பிறந்தார்.
2000 களுக்குப் பிறகு விஜயகாந்த் மெல்ல மெல்ல தன்னுடைய மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு சென்றார். விஜயகாந்த் மொத்தமாக 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் ஒரு படம் கூட தமிழில்லாத பிற மொழிப் படங்கள் இல்லை. சமீபத்தில் அவரது மரணம் தமிழக அளவில் ஒரு மாபெரும் துக்க நிகழ்வாக அமைந்தது. இன்னமும் கூட அவரது தொண்டர்களும் ரசிகர்களும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் தான் விஜயகாந்தை வில்லனாக உருவகித்து சிலக் கதைகளை சிறுவயதில் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். அதில் “எனக்கு சிறுவயதில் இருந்தே விஜயகாந்தைப் பிடிக்கும். நாடகங்களில் அவர் பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். நான் சிறுவயதில் இருந்தே கதைகள் எழுதி வருகிறேன். விஜயகாந்தை வில்லனாக வைத்து சில கதைகள் எழுதியுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…