சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அணி திரண்டதோடு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாகவும் செயல்பட்டனர். இதன் காரணமாக அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், வேலுமணி உள்ளிட்ட சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்தனர். ஆனால், சி.வி. சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமைக்கு அடிபணிய மறுத்து தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி வந்தனர். பல முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே திமுக மற்றும் தவெக நோக்கி நகர்ந்து வரும் சூழலில், இச்சம்பவங்கள் அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக தலைமையுடன் நிலவி வந்த இந்த மோதலின் உச்சகட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமைக்கு எதிராகத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த விஜயபாஸ்கர், “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ இல்லை; அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை மக்களின் மனதை எப்படி வெல்லும்?” என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். தொகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்த நிலையில், அவரது ராஜினாமாவைச் சபாநாயகரும் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விராலிமலை தொகுதி மக்களுக்கு விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள உருக்கமான ஆடியோ பதிவில், இதுவொரு புதிய தொடக்கம் என்று பிரகடனப்படுத்தியுள்ளார். அதில், “வணக்கம், விராலிமலை மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் சொல்வதைப் போல இந்த விஜயபாஸ்கர் உங்கள் வீட்டுப் பிள்ளை; ஆயுள் உள்ள வரை உங்களுக்கு விசுவாசமாகவும் நன்றியுடனும் பணியாற்றுவேன். மக்கள் முடிவு தான் என் முடிவு என்பதை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன், இது வெறும் முடிவு கிடையாது; இது ஒரு நல்ல தொடக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அவர் விரைவில் தவெக அல்லது திமுகவில் இணைவதற்கேற்ற ஒரு வலுவான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.
பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…