என்னைப் பார்த்து கால் மேல கால்தூக்கிப் போட்டு ஸ்டைலா உக்காந்தா… தன்னை அவமானப்படுத்திய நடிகை குறித்து பேசிய பாரதிராஜா!

By vinoth on மார்கழி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம்.

   

ஆனால் சிரஞ்சீவியை விட சுதாகர் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால் அவரையே தேர்வு செய்துள்ளார். அதுபற்றி பேசியுள்ள பாரதிராஜா “சிரஞ்சீவி வந்தான். ஆனால் சுதாகர் என்னை ஏமாற்றி விட்டான். அவனிடம் வேட்டியைக் கொடுத்து பாண்டி பஜாரில் நடக்க விட்டேன். பொருத்தமாக இருந்தான். அதனால் சிரஞ்சீவிக்குப் பதில் சுதாகரையே நடிக்க வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

   

 

பாரதிராஜா நடிப்பு சொல்லிக்கொடுத்து அதை சரியாக செய்யாத நடிகர்களை எல்லாம் அடித்துவிடுவார் என்று அப்போது சொல்லப்படுவதுண்டு. ஆனாலும் அவரால் அறிமுகப்படுத்த நடிகர்கள் அனைவரும் இப்போது வரை அவரைப் பற்றி பெருமையாகவே பேசி வருகின்றனர்.

ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி ஒரு நிகழ்ச்சியில் பாரதிராஜாவை அவமானப்படுத்தும்படி செய்தாராம். அதுபற்றி பேசிய பாரதிராஜா “கல்லுக்குள் ஈரம் படத்தில் நான்தான் விஜயசாந்திய அறிமுகப்படுத்தினேன். நடிப்பு ஒழுங்கா வர்லண்னு அடிச்சிருக்கேன். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு பெரிய ஹீரோயின் ஆனதும் ஒரு நிகழ்ச்சியில சந்திச்சப்ப என்ன அவ மதிக்கல.  கால் மேல் கால் போட்டு ஸ்டைலா உக்காந்திருந்தா. நானும் அவங்ககிட்ட அதுக்கப்புறம் பேசவேயில்ல.” எனக் கூறியுள்ளார்.