விஜய் எடுத்த ‘அதிரடி’ முடிவு… திமுக-வுக்கு வைத்த செக்… பதவிகளை பறிக்க உத்தரவிட்டது ஏன்… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!

By SATHISH R on ஆடி 7, 2026

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையிலும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு வெற்றிகரமாக ஆட்சியை அமைத்துள்ளது. இந்த புதிய கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவளிக்க முடிவு செய்துள்ள நிலையில், மற்ற அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளன. ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அரசு நிர்வாகத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர் பதவிகளை நிரப்பும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக, த.வெ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத முக்கிய நிர்வாகிகளுக்கும், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்றுத் தளங்களில் இருந்து வந்து இணைந்தவர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் பல்வேறு வாரிய மற்றும் ஆணையத் தலைவர் பதவிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

   

இதற்கு வசதியாக, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பல்வேறு வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்களை தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு த.வெ.க. அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஏற்று, தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் சுனில் குமார், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மணிவண்ணன் மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல வாரியத் தலைவர்களும் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்கி வருகின்றனர்.

   

நிர்வாக ரீதியிலான இந்த மாற்றங்கள் ஒருபுறமிருக்க, முந்தைய தி.மு.க. அமைச்சர்களிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தற்போதும் த.வெ.க. அமைச்சர்களின் உதவியாளர்களாகத் தொடர்வதை புதிய அரசு கவனித்துள்ளது. பழைய உதவியாளர்கள் தொடர்ந்து அதே பதவிகளில் நீடித்தால், தற்போதைய அரசின் ரகசியங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் தி.மு.க. தரப்பிற்குச் சென்றுவிடக் கூடும் என த.வெ.க.வினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அவர்களை உடனடியாக அந்தந்தப் பணிகளில் இருந்து விடுவித்து, வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றுமாறு த.வெ.க. அரசு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது.