தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் விஜய், மக்களுக்காக மக்களின் பிரச்சனைகளை எடுத்துப் பேசுவதால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நம் மீது எரிச்சல் வரதானே செய்யும். அதனால்தான் சட்டசபையில் ஆரம்பித்து மேடைக்கு மேடை தமிழக வெற்றிக்கழகம் மீது அவதூறு பரப்புகிறார்கள்.
இதற்கெல்லாம் நிச்சயம் நாங்கள் பதில் சொல்ல தான் போகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை பற்றி கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகின்றேன். வந்தால் என்று சொல்லத் தேவையில்லை, வருவோம், மக்கள் நம்மை வர வைப்பார்கள். ஏனென்றால் மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வரவைக்க தானே செய்வார்கள். மற்றவர்களைப் போல சும்மா பேசிவிட்டு ஏமாற்றும் வேலை எல்லாம் இங்கு கிடையாது.
நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான். எங்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நம்முடைய அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்லிவிட்டான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில் எந்த ஒரு குழப்பமும் கிடையாது. நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டேன், அது மக்களுக்கும் நன்றாகவே தெரியும் என்று விஜய் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…