நடிகர் விஜய் சேதுபதி தனது கடினமான உழைப்பால் முன்னேறி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என அன்புடன் அழைக்கின்றனர்.

இந்நிலையில் இறைவன் பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கூறியதாவது, ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நான் ஜிம்பாய் ரோடில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்ததால் என்னை தெரிந்திருக்க முடியாது. பல படங்களில் இந்த மாதிரி சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளேன்.

நான் நடித்த முதல் படத்தில் எனக்கு சம்பளம் 250 ரூபாய். இரண்டாவது படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளமாக கொடுத்தார்கள். அதுவே பெரிய இன்கிரிமெண்ட் தான். நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவி சார். அவருடன் போகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அதில் நடிக்க முடியவில்லை. இனி ஜெயம் ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார்.

