#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.
மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி. தற்போது விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல youtube சீனர்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் விஜய் சேதுபதி. அப்போது வெற்றிமாறன் குறித்தும் அவரது இயக்கத்தில் பணியாற்றியது குறித்தும் பேசியுள்ளார். அதாவது, ‘முதலில் பொல்லாதவன் திரைப்படத்தை பார்த்துவிட்டுவெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இதனால் ஆடுகளம் பட ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதுக்கப்புறம் வடசென்னை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் டேட் பிரச்சனையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். அதுக்கப்புறமா விடுதலை படத்தில் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே என்னிடம் கால்சீட் கேட்டார்கள் என்று பேசியுள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…