சங்கீதாவின் ‘பிரஸ் மீட்’ பிளான்.. பதறிய தவெக கூடாரம்… செட்டில்மென்ட் ரூட்டில் விஜய்..?

By Soundarya on பங்குனி 4, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், சங்கீதா செய்தியாளர்களைச் சந்தித்து சில உண்மைகளை விளக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால் அது கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விஜய் தரப்பு அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தச் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்கும் நோக்கில் விஜய் தரப்பினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போதுள்ள சிக்கல்களைச் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வரவும், கட்சியின் பிம்பத்தைக் காக்கவும் சங்கீதாவுடன் சமரசப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே பேசப்பட்ட ஜீவனாம்சத் தொகையைவிடக் கூடுதல் தொகையை உயர்த்தி வழங்க விஜய் தரப்பு முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் பொதுவெளியில் விவாதமாவதைத் தடுக்கவே இத்தகைய சமரச முயற்சிகள் திரைமறைவில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.