தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த அவர், தனது பதவியை விலகுவதற்கான முடிவை எடுத்துள்ளார். இந்த அதிரடி மாற்றத்தால் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.
முதலமைச்சர் விஜய்யின் இந்த ராஜினாமா கடிதத்தை, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலரிடம் நேரில் சென்று வழங்கினர். ஒரு முதலமைச்சர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை மக்களிடையே அதிகரித்துள்ளது.
