லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்திருந்த லியோ படம் 12 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடல் பல்வேறு சர்ச்சையில் சிக்கியது. இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்.
நேற்று சென்னையில் நடந்த லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் ரெடி பாடலில் சில வரிகள் பிரச்சனை ஆனது. விரல் இடுக்குல தீபந்தம் என்ற வரி பிரச்சனை ஆனது. அது ஏன் சிகரெட் ஆக தான் இருக்க வேண்டுமா? பேனாவாக கூட இருக்கலாம். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் கூட தான் மது கடை இருக்கிறது.
அதுக்குன்னு டெய்லி இரண்டு ரவுண்டு அடிச்சிட்டா பள்ளிக்கு செல்கிறார்கள்? உங்களில் பல பேர் நேரம் காலம் பார்க்காமல் சக்தியை மீறி நல்லது செய்கிறீர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உதவி செய்வதை பார்த்து இருக்கிறேன் எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அது நம்ம பசங்க செய்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என கூறினார்.
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…