செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூரில் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடையில் பேசினார்.
அவர் கூறியதாவது, தன்னை சின்ன பையன் என்று நினைக்க வேண்டாம். விஜயகாந்த் மகனால் என்ன செய்துவிட முடியும் என யாரும் கணக்கு போட்டு விட வேண்டாம் என கோபமாக பேசினார். கடந்த 2021-ஆம் ஆண்டு நாங்கள் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு ஒருவர் பேசாமல் பிச்சை எடுக்க வேண்டியதுதானே என கமெண்ட் செய்தார். அப்படி நாங்கள் பிச்சை எடுத்திருந்தால் எங்களிடம் இப்போது எவ்வளவு எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் இருந்திருப்பார்கள்.
தே.மு.தி.கவை தொடங்குவதற்கு முன்பு தங்களிடம் எவ்வளவு சொத்து இருந்தது தெரியுமா?. இப்போது தங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை வெளியிட தயார் என கூறினார். அரசியல் கட்சி தொடங்கியதன் மூலம் சொந்த சொத்தை விற்பனை செய்து செலவு செய்து வருவதை விஜய பிரபாகரன் சுட்டிக்காட்டி பேசினார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக முன்கூட்டியே பேசினால் வேறு வழி இல்லாமல் ஓடி வருகிறார்கள் எனவும், கடைசியில் பேசினால் பேரம் பேசுகிறார்கள் எனவும் எங்களை விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்மானத்தோடு கட்சியை வழிநடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயகாந்த் வீட்டில் இருப்பதால் தேமுதிக தேய்ந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் எனவும், 100 வருடம் அல்ல 200 வருடம் அல்ல 500 வருடமானாலும் தேமுதிக இயங்கும் என கூறினார். நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம் என்றும் ஏன் தேமுதிகவை பற்றிய அவதூறுகளையும், விமர்சனங்களையும் மீடியாக்கள் முன்வைக்கிறது என விஜய பிரபாகரன் கோபத்தில் கொந்தளித்தார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…