தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்’ (Operation Blue Giant) என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் ஏற்கனவே சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையின் போது, “ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என விஜய் மக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அரசு இயந்திரம் இந்த விவகாரத்தில் வேகம் காட்டி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
