BREAKING: அடுத்த அதிரடி… சற்றுமுன் விஜய் புதிய உத்தரவு… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜயின் கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனை தொடர்ந்து இன்று நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜயின் அரசியல் நுழைவு அதிமுக மற்றும் திமுகவிற்கு பெரிய சவாலாகவே மாறி உள்ளது. தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பூத் என்றால் என்ன, SIR என்றால் என்ன? என்பது பற்றியும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.